
உன் வார்த்தைகள் என்னை
உயிரோடு கொன்றாலும்
நான் அந்த வார்த்தைகளை
மறக்க நினைப்பதில்லை
உன்னை கடைசி வரை
நான் மறக்காமல் வாழ
நீ என்னை நிஜமாக விரும்பாத
போதும் நான் உன்னை
விரும்புகிறேன் வார்த்தையில்
ஆவது என்னை நீ விரும்பி
சென்றாயே என்பதற்காக .......
என்னை பல உறவுகள் வெறுத்த
போதும் வலிக்கவில்லை உறவே
இல்லாமல் என்னில் காதல்
செய்து உன் நாமத்தில் என்
உயிரை வாழ வைத்த நீ
வெறுக்கும் போது உயிரே
வெறுக்குதடா என்னை
சோகமே இன்று என் சொந்தமாகி
என் கவிதையே என்னை
தாலாட்டி என் கண்ணீர் மட்டும்
என்னை விட்டு பிரியாமல்
எனக்கு ஆறுதலாய் ......
உன் நாமத்தில் நீ எனக்கு
தந்த உயிர் உன்
நினைவுகளோடு காலமெல்லாம்
வாழும் நீண்ட ஆயுளோடு
என் ஆயுள் இறுதியில் ஆவது
ஒரு நொடி என் முன் வந்து
விடு உன் முகம் பார்த்து
நான் மரணிக்க வேண்டும்
v.m.j.gowsi





