Friday, February 24, 2012


உன் வார்த்தைகள் என்னை
உயிரோடு கொன்றாலும்
நான் அந்த வார்த்தைகளை
மறக்க நினைப்பதில்லை
உன்னை கடைசி வரை
நான் மறக்காமல் வாழ

நீ என்னை நிஜமாக விரும்பாத
போதும் நான் உன்னை
விரும்புகிறேன் வார்த்தையில்
ஆவது என்னை நீ விரும்பி
சென்றாயே என்பதற்காக .......

என்னை பல உறவுகள் வெறுத்த
போதும் வலிக்கவில்லை உறவே
இல்லாமல் என்னில் காதல்
செய்து உன் நாமத்தில் என்
உயிரை வாழ வைத்த நீ
வெறுக்கும் போது உயிரே
வெறுக்குதடா என்னை

சோகமே இன்று என் சொந்தமாகி
என் கவிதையே என்னை
தாலாட்டி என் கண்ணீர் மட்டும்
என்னை விட்டு பிரியாமல்
எனக்கு ஆறுதலாய் ......

உன் நாமத்தில் நீ எனக்கு
தந்த உயிர் உன்
நினைவுகளோடு காலமெல்லாம்
வாழும் நீண்ட ஆயுளோடு

என் ஆயுள் இறுதியில் ஆவது
ஒரு நொடி என் முன் வந்து
விடு உன் முகம் பார்த்து
நான் மரணிக்க வேண்டும்
v.m.j.gowsi

எந்நிலை மறந்து
உன்னை நேசம் செய்தேன்
இன்று உன்னாலே எந்நிலை
உணர்ந்து பிரியமுடன் பிரிந்து
விட்டேன் v.m.j.gowsi

உன்னை காணவில்லை
ஏங்கி ஏங்கியே இரவுகள்
விடிந்து விட்டது விடிந்த
பின்பு தான் சிந்திப்பேன்
தூங்கி இருந்தால் கனவில்
ஆவது உன்னை நான்
சந்திதிருப்பேனே என்று
v.m.j.gowsi

Thursday, February 23, 2012

மரணவலி


என் மனதை அறிய முடியாத
உன் மனது
என் காதலை புரிய முடியாத
உன் வார்த்தை
இரண்டும் எனக்குள் மரணவலியை
தந்து செல்கிறது v.m.j.gowsi

உணர்ந்தேன் உன்னாலே


விடை தெரியாத வினாவாக
என் உணர்வுகளோடு என்
கவிதையில் வாழ்ந்து விட்டு
போகட்டும் என் காதல்
நிஜங்கள் இல்லாத எதுகும்
நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
உன்னாலே
v.m.j.gowsi

ஜடம் என்று எண்ணிவிட்டாயா ?


உரிமையுள்ள உறவென்றால் நான்
விலகிய போதும் என்னிடம்
நீ எனக்ககா வந்திருப்பாய்
உன் உள்ளம் என்றும் அறியும்
உன்மீது நான் கொண்ட உயிர்
காதலை .....ஆனால் நீ விலகி
வலி கொடுத்து விட்டாய் உணர்வற்ற
ஜடம் என்று எண்ணிவிட்டாயா ?
என்னை ......
v.m.j.gowsi

வஞ்சித்து விட்டாயே


உறவுகள் எல்லாம் என்னை
வார்த்தையால் வஞ்சித்தவேளை
நீ மட்டும் வார்த்தையால் அன்பை
தந்தாயே....உன் அன்பொன்றே
உலகம் உன் வார்த்தையே சத்தியம்
என்று வாழ்ந்தேனே நீயும்
வார்த்தையால் வஞ்சித்து விட்டாயேv.m.j.gowsi